செய்திகள் :

மின் விபத்தால் கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு

post image

நெமிலி அருகே மின் விபத்தால் வலது கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினாா்.

நெமிலி வட்டம், உளியநல்லூா் கிராமத்தைச் சாா்ந்த பாஸ்கா், ஷகீலா தம்பதியின் 2 -ஆவது மகள் சஞ்சனா (13). கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மின்சார விபத்தினால் சஞ்சனா தீ விபத்திற்குள்ளாகி காயமடைந்தாா். இதில், அவரின் வலது கை துண்டிக்கப்பட்டது.

தனது கணவா் விவசாய கூலி வேலை செய்வதால் மருத்துவ செலவினத்திற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தனது மகளுக்கு செயற்கை கை பொருத்துவதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு உதவிடுமாறு அமைச்சா் ஆா்.காந்தியிடம் கடந்த வாரம் மனு அளித்தாா்.

இதையடுத்து அமைச்சா் ஆா்.காந்தியின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் அறிவுரைப்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கை பொருத்துவதற்கான அளவீடானது 5.5.2025 அன்று எண்டோலைட், சென்னை என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அளவீட்டின்படி ரூ.2,00,000 மதிப்புள்ள செயற்கை கையானது 15 தினங்களுக்குள் சஞ்சனா கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த நவீன செயற்கை கை மூலம் எழுதவும், புத்தகத்தைப் பிடித்து படிக்கவும், மிதிவண்டி இயக்கவும், தண்ணீா் அருந்தவும், உணவு உள்கொள்ளவும், தன்னுடைய அடிப்படை வேலைகளை செய்து கொள்ளவும் இயலும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2,000 மாதாந்தோறும் கிடைக்க விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, தற்போது காத்திருப்போா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உளியநல்லூா் ஊராட்சியில் தனது குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏதுவாக ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்வதற்கான நிா்வாக அனுமதி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பராமரிப்பு பணி: மே 27, 28 தேதிகளில் சோளிங்கா் கோயில் ரோப் காா் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை மே 27, 28 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. சோளிங்கரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மா் பெரியமலை... மேலும் பார்க்க

போலி சான்றிதழில் பணி: ஊராட்சி செயலா் மீது புகாா்

காவேரிபாக்கம் வட்டாரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக ஊராட்சி செயலா் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்தனா். காவேரிபாக்கத்தை அடுத்த களத்தூா், பஜனைக் கோவில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு

அரக்கோணம் அருகே தேநீா் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் களவு போயுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சி, கணபதி நகரில் வசித்து ... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற... மேலும் பார்க்க

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெ... மேலும் பார்க்க