செய்திகள் :

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

post image

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் சைபர் குற்ற முகாம்களில் வலுகட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் கொண்ட குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 11 இளைஞர்களும் 2 இளம் பெண்களும் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவர்கள் இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட், 607 கேக் விற்பனை!

இதனிடையே, மியான்மரில் தனித்தனி சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன மற்ற 4 இலங்கையர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், அண்மையில் நடைபெற்ற தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் மியான்மர் துணைப் பிரதமர் உடனான பேச்சுவார்த்தையில், இலங்கையர்களை மீட்பதற்கான உதவியினை கோரியிருந்தார்.

இதன் விளைவாக மியான்மரில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அ... மேலும் பார்க்க

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரி... மேலும் பார்க்க

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் ... மேலும் பார்க்க