செய்திகள் :

``மிரட்டலுக்கு பயந்து தான் பங்கேற்கவில்லை..'' - மேடையில் குமுறிய கவர்னர்; ஊட்டி ராஜ்பவன் அப்டேட்ஸ்

post image

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு உண்டு. கவர்னரே வேந்தராக தொடர்வார் எனக்கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்காக ஊட்டி ராஜ்பவனில் ஏற்பாடுகள் தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தது.

துணைவேந்தர்கள் மாநாடு

திட்டமிட்டபடியே கவர்னர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரும் ஊட்டியை வந்தடைந்தனர். ஆனால், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தான் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருக்கிறாரகள்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்காத நிலையில், மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் மிரட்டலுக்கு பயந்து தான் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டை மேடையில் முன்வைத்து கோபம் கொப்பளித்துள்ளார்.

கவர்னரைத் தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், " தேசிய கல்விக் கொள்கை என்பது அரசின் கல்விக் கொள்கை அல்ல நாட்டின் கல்விக் கொள்கையாகும்.

துணைவேந்தர்கள் மாநாடு

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேசிய கல்விக் கொள்கையை நன்கு ஆராய்ச்சி செய்து அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் பலர் பங்கேற்காததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதனை கவர்னர் பெரிதாக எடுத்துக்கொண்டு வருத்தப்படத் தேவையில்லை" என ஆறுதல் கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`திமுக-வுக்கு இவ்வளவு அடிமையாக திருமாவளவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!’ - தமிழிசை சௌந்தரராஜன்

“ ‘2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என அமித் ஷா சொல்கிறார். மறுபக்கம் எடப்பாடியோ ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்கிறாரே?”``இந்த கூட்டணி அமைத்ததிலிருந்தே, தி.மு.க-வுக்கும் அதன் கூட்ட... மேலும் பார்க்க

ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ரெடி; ஆனால், துணை வேந்தர்கள்? - என்ன நடக்கிறது ஊட்டி ராஜ்பவனில்?

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு பரபரப்பான சூழலில் இன்று (ஏப்ரல் 25) காலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடங்க ... மேலும் பார்க்க

Simla Agreement: போர் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தம்; ரத்து செய்யப்பட்டால் என்னவாகும்? - ஓர் பார்வை

கடந்த ஏப்ரல் 21.04. 2025 தேதியில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா 'சிந்து நதி நீர் ஒப்பந்த'த்தை ... மேலும் பார்க்க

Boycott Prabhas Movie Issue: ``நான் பாகிஸ்தானி இல்லை..'' - பிரபாஸ் பட நடிகை இமான்வி விளக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்... மேலும் பார்க்க

Pahalgam Attack: "துணிச்சலான வீரர் சையது" - உயிர்த் தியாகம் செய்த குதிரை ஓட்டிக்கு ஊரே கூடி அஞ்சலி

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``கார்கில் முதல் கன்னியாகுமரி வரை துக்கமும் ஆத்திரமும் நிறைந்திருக்கிறது" - மோடி

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர்... மேலும் பார்க்க