செய்திகள் :

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்..! 36 வயதில் ரஹானே நம்பிக்கை!

post image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணிகயில் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கடந்த பத்தாண்டுகளாக விளையாடாமல் இருக்கிறார்.

36 வயதாகும் ரஹானே 85 டெஸ்ட் போட்டிகளில் 5077 ரன்களும் 90 ஒருநாள் போட்டிகளில் 2962 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ப்ரஸ் ரூம் நிகழ்ச்சியில் ரஹானே பேசியதாவது:

100% அதிகமாக உழைப்பேன்

இந்திய அணிக்கு மீண்டும் விளையாட விரும்புகிறேன். அதற்கான ஆசை, பசி, ஆர்வம் என எல்லாமே இருக்கிறது. உடல்நலம் ரீதியாக நான் தகுதியுடனே இருக்கிறேன்.

தற்போதைக்கு நான் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நான் எப்போதும் விடாமுயற்சியுள்ள நபர். ஃபீல்டிங்கில் என்னுடைய சிறந்தவற்றை அளிக்க முயற்சிப்பேன். அது 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்

எப்போதுமே என்னால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதில்தான் நான் கவனம் செலுத்துவேன்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் விளையாடுவேன். தற்போதைக்கு மகிழ்ச்சியாக கிரிக்கெட் ஆடி வருகிறேன்.

தினமும் எழுந்தவுடன் என்ன சாதனையை செய்து முடிக்க வேண்டும் என்பதை சிந்திப்பேன். இந்தியாவுக்காக விளையாடுவதைவிட சிறந்தது எதுவுமில்லை.

எனது நாட்டை பிரதிநிதிப்படுத்தி விளையாட வேண்டும். இந்திய அணியின் நிறம் பதிந்த உடையில் விளையாட வேண்டும்.

ஃபிட்னஸ் முக்கியம்

கிரிக்கெட் இல்லாதபோதும் நான் ஒரு நாளைக்கு -3 செஷன்கள் பயிற்சி செய்வேன்.

இப்போதைக்கு என்னை உடல் ரீதியாக நலமுடன் வைத்துக்கொள்வது முக்கியமென நினைக்கிறேன். இயல்பு நிலைக்கு திரும்புதல் என்பது மிகவும் முக்கியமானது.

எனது உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனமாக இருக்கிறேன். இந்தியாவுக்காக நன்றாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். இப்போதும் ஆர்வத்துடன் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்றார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி.யை ரஹானே தலைமையில் இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கிறது.

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் அதிரடி..! மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தனது அதிரடியான பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார். இந்தாண்டு தொடர்ச்சியாக நம்.3 இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக மாறியதால் இந்த இட... மேலும் பார்க்க

நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாகுவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அகமதாபாத் திடலில் நடந்த நேற்றைய (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன... மேலும் பார்க்க

வென்றது குஜராத்; வெளியேறியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடு... மேலும் பார்க்க

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; தோல்வியிலிருந்து மீளுமா?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹ... மேலும் பார்க்க