செய்திகள் :

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

post image

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. கட்சியின் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அயனாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .

இதில் நூற்றுக்கணக்கான அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகிகளின் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:

”மத்தியக் கல்விக் கொள்கை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்கள்(திமுக) ஆட்சி முடியும் தருவாயில் மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளனர். இதனை முன்பே வெளியிட்டு இருக்கலாம், இதனை விமர்சனம் செய்யும் அளவிற்கு ஒன்றுமில்லை.

நான் பெரிதும் மதிக்கும் அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன், கடந்த ஓராண்டு காலமாக அவர் பேசுவதில் குழப்பங்கள் தெரிகிறது. முன்பு ஒரு கருத்தை தெரிந்துவிட்டு, பின்பு அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறார்.

பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும். அதனை தில்லி தலைவர்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் அழைத்துப் பேசி கூட்டணிக்குள் சேர்த்தால் சந்தோஷம்தான்.

கடந்த ஓராண்டு காலமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறேன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

மீண்டும் பழனிசாமியுடன் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமே எங்களுக்குக் கிடையாது" என்றார்.

இதையும் படிக்க: தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

AMMK General Secretary T.T.V. Dinakaran has categorically stated that he has no intention of joining hands with EPS again.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் முதல்முறையாக 11 தாழ்தளப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்தது.இன்று(ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்... மேலும் பார்க்க