செய்திகள் :

மீண்டும் முழு கொள்ள‌ளவை எட்டியது மேட்டூர் அணை !

post image

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் நடபாண்டில் இரண்டாவது முறையாக 120 அடி எட்டியது.

மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் தேதி எட்டியது. அதன் பிறகு நான்கு நாள்களாக நீர் மட்டம் 120 அடி நீடித்து வந்தது. அதன் பிறகு கடந்த 3 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் மட்டம் 119 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவு 8 மணி அளவில் 120 அடியாக மீண்டும் உயர்ந்தந்துள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 92 ஆண்டு கால வரலாற்றில் 45 வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 53,205 கன அடியிலிருந்து 53,027 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!

The Mettur Dam in Tamil Nadu, India, reached its full capacity of 120 feet for the second time in a row due to increased water inflow. 

மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் விண்ணப்பம்!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக நாளை(ஜூலை 7) முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படுகிறது.மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.ஜூலை 15இல... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் ... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் பாஜக! மாநாடு அறிவிப்பு!

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முட... மேலும் பார்க்க

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழ... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.நாமக்கல் தில்லைபுரம் பகு... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.இன்று(ஜூலை 7) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 ... மேலும் பார்க்க