செய்திகள் :

`மீண்டும் வருவேன்' பார்சல் கொண்டுவந்த கூரியர்பாய்; தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

post image

உணவு, தபால், பொருள்கள் என எதாவது ஒரு பொருளை டெலிவரி செய்ய டெலிவரிபாய்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது இன்று வழக்கமாகிவிட்டது. புனே கொண்ட்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒருவர் கூரியர் டெலிவரி செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு வந்தார். இதனால் செக்யூரிட்டி கார்டு எந்த கேள்வியும் கேட்காமல் கட்டடதிற்குள் அனுமதித்தனர்.

அந்த நபர் நேரடியாக 22 வயது பெண் வசிக்கும் வீட்டிற்கு சென்று கூரியர் வந்திருப்பதாக தெரிவித்தார். அப்பெண்ணிடம் ஒ.டி.பி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனெ அப்பெண் தனது போனை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அந்நேரம் கூரியர் கொண்டு வந்திருந்த நபர் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துவிட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அவர் அடித்த ஸ்ப்ரேயால் அப்பெண் மயக்கமாகிவிடார். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அப்பெண்ணின் மொபைல் போனில் அப்பெண்ணுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்ட கூரியர் பாய் அதில், 'மீண்டும் வருவேன்' என்று எழுதி வைத்துவிட்டு சென்றார். வெளியில் சென்று இருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை மயக்கம் தெளியவைத்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து துணை கமிஷனர் ராஜ்குமார் கூறுகையில், ''இரவு 7.30 மணிக்கு கூரியர் பாய் வந்துள்ளார். அவருக்கு ஒ.டி.பி கொடுக்க போனை எடுக்க பெண் வீட்டிற்குள் சென்றபோது கூரியர் பாய் வீட்டு கதவை பூட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போனில் ஒரு செல்பி இருந்தது. அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துள்ளார். இதனால் அப்பெண் மயக்கத்தில் இருந்தார்''என்றார். கூரியர் பாயின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!

தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செ... மேலும் பார்க்க

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலைபுதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க