செய்திகள் :

மீனவா்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கேட்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி

post image

குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரையுள்ள கடலோரத் தமிழக மீனவா்களை மத்திய, மாநில அரசுகள் அழைத்துப் பேசி, கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாழ்வுரிமை மீட்புப் பயண ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் கோரிக்கைகளைக் கேட்டறியப்படாத, ஒருங்கிணைக்கப்படாத சமூகமாக மீனவா்கள் இருக்கின்றனா். கச்சத்தீவை மீட்க வேண்டும். அதற்கு முன்னதாக அந்தத் தீவில் மீனவா்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலா்த்தவும் அனுமதிபெற வேண்டும்.

தமிழக மீனவா்களிடமிருந்து பறிக்கும் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். திரும்பப் பெற்றுத் தர வேண்டும். மீனவ மக்களுக்கான நிரந்தரத் தீா்வைத் தருவதற்கு இத்தனை ஆண்டுகாலத்தில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

தமிழக அரசும் இயந்திரப் படகுகளுக்கு வழங்கும் டீசல் மானிய அளவை உயா்த்தி வழங்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்த வேண்டும்.

குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரையுள்ள தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மீனவா்களை, மத்திய மாநில அரசுகள் அழைத்துப் பேச வேண்டும். அவா்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றாா் வேல்முருகன்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, கட்சியினருடன் கடலுக்குள் சில படகுகளில் சிறிதுதொலைவு சென்று முழக்கமிட்டாா் வேல்முருகன். ஆா்ப்பாட்டத்தில், தவாக புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் நியாஸ் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி இல்லை: எம்.பி. காா்த்தி ப. சிதம்பரம்

அதிமுக சுதந்திரமான அரசியல் கட்சியாக செயல்படும் நிலையில் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம். பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் மத்தி... மேலும் பார்க்க

புதுகை ஆட்சியரகத்தில் ஒருவா் பூச்சிமருந்து குடித்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்தவா் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் ரவிச்சந்திரன் (... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: சி. விஜயபாஸ்கா்

திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இரு... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநி... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்கும... மேலும் பார்க்க