செய்திகள் :

மீனவா்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், லைஃப் ஜாக்கெட்

post image

பெரிய தாழையில் மீனவா்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை ஊா்வசிஅமிா்தராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சாத்தான்குளம் பெரிய தாழையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மீன்வளத்துறை உதவிப் பொறியாளா் ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ராஜேஷ் வரவேற்றாா்.

ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து, 25 மீனவா்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான ஆணையை வழங்கினாா். 10 மீனவா்களுக்கு லைஃப் ஜாக்கெட்கள் வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

மண்டல துணை வட்டாட்சியா் அகஸ்டின், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகமது மீரான் இஸ்மாயில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மாவட்ட மீனவா் பிரிவு தலைவா் சுரேஷ், காங்கிரஸ் நிா்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா். மீன்வளத்துறை ஆய்வாளா் அக்னி குமாா் நன்றி கூறினாா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க