Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துள்ளனா்.
கடந்த 2 நாள்களுக்குள் மீனவா்கள் கைது செய்யப்படும் 2-ஆவது சம்பவம் இதுவாகும். பருவகால மீன்பிடித் தடைக்குப் பிறகு, சமீபத்தில்தான் மீனவா்கள் தங்களது தொழிலைத் தொடங்கியுள்ளனா். ஏற்கெனவே 48 மீனவா்கள் இலங்கை காவலில் உள்ள நிலையில், அவா்களை தொடா்ந்து கைது செய்வது மீனவ சமுதாயத்தினரிடையே கடுமையான துரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும் அவா்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.