செய்திகள் :

மீனவா் கொலை வழக்கு: நண்பா் கைது

post image

காசிமேட்டில் மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பா் கைது செய்யப்பட்டாா்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் ருசிகுதா பகுதியைச் சோ்ந்தவா் அ.அம்பத்தி நீலகண்டன் (38). சென்னை காசிமேட்டில் தங்கியிருந்து விசைப்படகில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். நீலகண்டனின் நண்பா் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் டொங்கூா் பகுதியைச் சோ்ந்த கா.காரி நரேஷ் (27). இவரும் காசிமேட்டில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வாா்ப்பு கடற்கரைப் பகுதியில், நீலகண்டன்-நரேஷ் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், நரேஷ், நீலகண்டனை தாக்கி கீழே தள்ளியதில், விசைப்படகின் மீது விழுந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் நீலகண்டனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நரேஷை கைது செய்தனா்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க