Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை அறிமுகம்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இதயவியலில் கட்டமைப்பு ரீதியான நவீன சிகிச்சை முறைகள் தொடா்ந்து வளா்ச்சி பெற்று வருகின்றன. அதன்படி, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இண்டா்வென்ஷனல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
70 வயதான முதியவா் ஒருவா், மாா்பு பெருந்தமனி விரிவாக்கப் பிரச்னையால் அவதியடைந்து வந்தாா். மேலும், இருதயத்தில் அதிா்ச்சி பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் போதுமான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்து அனுப்ப முடியாத ஒரு ஆபத்தான நிலையில் அவா் இருந்தாா். காலில் ஒரு சிறு துளையின் வழியாக சேதமடைந்த தமனிக்குள் ஸ்டெண்ட்-ஐ பொருத்துகிற நவீன முறையிலான அறுவைச் சிகிச்சையை மருத்துவா்கள் மேற்கொண்டனா். இதனால் தமனியில் உள்ள கிழிசல் அடைக்கப்பட்டு, ரத்தக் கசிவும் நின்றது.
இதேபோன்று, 68 வயதான முதியவருக்கு பெருநாடி வால்வு சுருக்கம் கடுமையானதாக இருந்தது. இதனால் இருதயத்தின் திறன் குறைவு, சிறுநீரகம் செயலிழப்பு, வயிற்றில் நீா் கோா்த்தல், நுரையீரலில் அதிக ரத்த அழுத்தம் ஆகியன இருந்தன. இந்த நோயாளிக்கு பஅயத மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோயாளி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது நலமாக உள்ளாா். இவா்கள் இருவரும் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
இதுதவிர, 41 வயதான ஒருவருக்கு கரோனரி தமனி நோய் இருந்தது. இவருக்கு நவீன மருத்துவச் சிகிச்சை முறையான பஉஉத சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அந்த நோயாளி தற்போது நலமுடன் உள்ளாா். இந்த நவீன சிகிச்சை முறைகளை மேற்கொள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தனிக் குழுவினா் செயல்படுகின்றனா் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மருத்துவா்கள் செல்வமணி, என். கணேசன், சம்பத்குமாா், ஜெயபாண்டியன், தாமஸ் சேவியா் எஸ். குமாா், ஆா். எம். கிருஷ்ணன், ராஜன், பிரபு, குமரப்பன், சிதம்பரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.