செய்திகள் :

மீன்சுருட்டியில் சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறப்பு

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவாறு காணொலி வாயிலாக மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில் உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) பி.சுமதி பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திருவருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவி... மேலும் பார்க்க

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொ... மேலும் பார்க்க

செந்துறை அருகே ஏரியில் இளைஞா் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை, இளைஞா் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா். செந்துறை அடுத்த செங்கமேடு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சாமிதுரை மகன் சக்திவேல் (39). திங்கள்கிழமை காலை, இவா் வீட்... மேலும் பார்க்க

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஓரணி... மேலும் பார்க்க

தா.பழூா் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே சனிக்கிழமை தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. தா.பழூரை அடுத்த வாழைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், சனிக்கிழமை தனது வீட்டருகேயுள்ள கொட... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்க... மேலும் பார்க்க