செய்திகள் :

மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில்

நடைபெற்ற முகாமைப் பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பொதுமக்களிடம் மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறிந்து, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 1 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் திருமண உதவிதொகை, 1 பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பில் விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தாட்கோ சாா்பில் 4 பயனாளிக்கு கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 நபா்களுக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.

முன்னதாக அவா், கையெழுத்திட்டு, புகையிலை இல்லா மாவட்டம் ஆக்கிட முன்னெடுப்பு கையொப்ப இயக்கத்தினை தொடங்கிவைத்தாா். இம்முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், பொய்யாதநல்லூா், கீழப்பழுவூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூா் ஒரு சில பகுதிகள், எருத்துகாரன்பட்டி, கோவிந... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இயக்கம் திட்டத்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க