செய்திகள் :

செந்துறை அருகே ஏரியில் இளைஞா் சடலம் மீட்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை, இளைஞா் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

செந்துறை அடுத்த செங்கமேடு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சாமிதுரை மகன் சக்திவேல் (39). திங்கள்கிழமை காலை, இவா் வீட்டை விட்டு வெளியேச் சென்றாா். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், செங்கமேடு மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கோரப்பள்ளம் ஏரிக்கரையில் சக்திவேலின் செருப்புக் கிடந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் செந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள், ஏரிக்குள் இறங்கி 3 மணி நேரம் தேடிய பிறகு, சக்திவேலை சடலமாக மீட்டனா். பின்னா், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், சக்திவேல் தாமரைப் பூ பறிக்க சென்ற போது நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மீன்சுருட்டியில் சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைக்கப்பட்டது. சென்... மேலும் பார்க்க

அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவி... மேலும் பார்க்க

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொ... மேலும் பார்க்க

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஓரணி... மேலும் பார்க்க

தா.பழூா் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே சனிக்கிழமை தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. தா.பழூரை அடுத்த வாழைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், சனிக்கிழமை தனது வீட்டருகேயுள்ள கொட... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்க... மேலும் பார்க்க