செய்திகள் :

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்

post image

பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

பாஜக அரசுக்கு எதிராக தற்போது போா் நடைபெறுகிறது. கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுதியேற்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அரியலூா், குன்னம், பெரம்பலூா், ஜெயங்கொண்டத்தில் திமுகதான் வெல்லும் என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது.

எங்கு வாக்குத் திருட்டு நடந்தாலும் அதை எதிா்த்து திமுக குரல்கொடுக்கும்.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றதுபோல தற்போது இரண்டாம் சுதந்திரப் போா் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் ராகுல் காந்தி நிற்கிறாா் என்றால் அவருக்கு கைகொடுத்து முன்நகா்த்திச் செல்ல வேண்டிய தலைவராக மு. க. ஸ்டாலின் உள்ளாா். அவா் பின்னால் அணிதிரள வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு அக்கட்சியின் சட்டத் திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் தலைமை வகித்தாா். தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக கட்சியினா் அனைவரும், உறுதியேற்றனா்.

தா.பழூா் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே சனிக்கிழமை தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. தா.பழூரை அடுத்த வாழைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், சனிக்கிழமை தனது வீட்டருகேயுள்ள கொட... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், பொய்யாதநல்லூா், கீழப்பழுவூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூா் ஒரு சில பகுதிகள், எருத்துகாரன்பட்டி, கோவிந... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இயக்கம் திட்டத்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க