செய்திகள் :

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

post image

உத்தர பிரதேசத்தில் பெண்களை கடத்த முயற்சிக்கும் நிர்வாண கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பராலா கிராமத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை நிர்வாணமாக ஓடிவந்த இரு ஆண்கள் வயலுக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். இருப்பினும், அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டதுடன், அவர்களிடமிருந்து தப்பித்தும் விட்டார். கடத்த முயன்றவர்களும் வயலுக்குள் தப்பியோடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கூச்சல் கேட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோதிலும், கடத்த முயன்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடத்த முயன்றவர்களின் அடையாளங்கள் குறித்து பெண்ணிடம் வினவப்பட்ட போதிலும், அவர்கள் நிர்வாணமாக இருந்ததாக மட்டுமே கூறினார்.

இதனையடுத்து, காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ட்ரோன் மூலம் சோதனை செய்யப்பட்டது.

இருப்பினும், இது முதல்முறை அல்ல; ஏற்கெனவே மூன்று முறையும் இத்தோடு நான்காவது என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நிர்வாணமான ஆண்கள் கடத்திச் செல்வது குறித்து வெளியில் சொல்வது என்பது அவமானம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதியுள்ளனர். இந்த நிலையில்தான், நான்காவது முயற்சியில் வெளிவந்துள்ளது.

இதுவரையில், பெண்களை மட்டுமே குறிவைத்து அவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். வயல்களைச் சுற்றிவளைத்து சோதனை, ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டும் சந்தேகப்படும்படியாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றே காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fear grips UP Meerut villages as ‘nude gang’ allegedly targets women in fields

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க