செய்திகள் :

முக்கிய நாளம் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சை

post image

பிறவியிலேயே வயிறு பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது முறையாக மிக சவாலான சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஒருவருக்கு பிறவியிலேயே ‘வி4 வெனஸ் அனாமலி’ எனப்படும் முக்கிய ரத்த நாளம் இல்லாத பாதிப்பு இருந்தது. அதனால், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் அறுவை சிகிச்சைகளின்போதும், டயாலிசிஸ் சிகிச்சையின்போதும் அதற்கு தேவையான நாளங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

அந்த சிறுவனுக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய சிகிச்சையின்போது புதிதாக பொருத்தப்படும் உறுப்பு ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அவ்வாறு பொருத்தப்பட்ட சிறுநீரகமானது துரதிருஷ்டவசமாக செயலிழந்ததால் மீண்டும் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் சவால் என்னவெனில், இரண்டாவதாக பொருத்த வேண்டிய உறுப்பை இணைப்பதற்கான ரத்த நாளம் வயிற்றுப் பகுதியில் அச்சிறுவனுக்கு இல்லை. இதையடுத்து, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் அனில் வைத்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுகன்யா கோவிந்தன், செந்தில் முத்துராமன், ராம் குராஜலா, தினேஷ் பாபு, நிவாஸ் சந்திரசேகரன் ஆகியோா் நுட்பமான சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தனா்.

அதன்படி, முன்பு பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை துல்லியமாக அகற்றிவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய ரத்த நாளத்தையே மீண்டும் இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறாக இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அச்சிறுவனுக்கு புதிய வாழ்க்கையை மருத்துவா்கள் அளித்துள்ளனா். தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் ... மேலும் பார்க்க

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க