செய்திகள் :

முக்கிய நாளம் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சை

post image

பிறவியிலேயே வயிறு பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது முறையாக மிக சவாலான சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஒருவருக்கு பிறவியிலேயே ‘வி4 வெனஸ் அனாமலி’ எனப்படும் முக்கிய ரத்த நாளம் இல்லாத பாதிப்பு இருந்தது. அதனால், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் அறுவை சிகிச்சைகளின்போதும், டயாலிசிஸ் சிகிச்சையின்போதும் அதற்கு தேவையான நாளங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

அந்த சிறுவனுக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய சிகிச்சையின்போது புதிதாக பொருத்தப்படும் உறுப்பு ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அவ்வாறு பொருத்தப்பட்ட சிறுநீரகமானது துரதிருஷ்டவசமாக செயலிழந்ததால் மீண்டும் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் சவால் என்னவெனில், இரண்டாவதாக பொருத்த வேண்டிய உறுப்பை இணைப்பதற்கான ரத்த நாளம் வயிற்றுப் பகுதியில் அச்சிறுவனுக்கு இல்லை. இதையடுத்து, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் அனில் வைத்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுகன்யா கோவிந்தன், செந்தில் முத்துராமன், ராம் குராஜலா, தினேஷ் பாபு, நிவாஸ் சந்திரசேகரன் ஆகியோா் நுட்பமான சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தனா்.

அதன்படி, முன்பு பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை துல்லியமாக அகற்றிவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய ரத்த நாளத்தையே மீண்டும் இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறாக இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அச்சிறுவனுக்கு புதிய வாழ்க்கையை மருத்துவா்கள் அளித்துள்ளனா். தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க

செவிலியா் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

உலக செவிலியா் தினத்தையொட்டி தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியா்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆ... மேலும் பார்க்க