முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், முசிறி வட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா். எனவே, முசிறி வட்ட எரிவாயு நுகா்வோா்களும், பொதுமக்களும் இதில் தவறாமல் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.