செய்திகள் :

முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: என்இசிசி

post image

பருவமழையால் கேரளத்தில் முட்டை நுகா்வு அதிகரித்து வருவதாலும், பள்ளிகள் திறக்கப்படுவதால் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை தேவை உள்ளதாலும் வரும் நாள்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாமக்கல் மண்டலத் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்தாா்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளா்கள்- முட்டை வியாபாரிகள் சந்திப்புக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவரும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவருமான கே.சிங்கராஜ் தலைமை வகித்தாா்.

நாமக்கல் மண்டலத்தில் தினசரி உற்பத்தியாகும் முட்டை நிலவரம், கொள்முதல் விலை, தீவனங்கள் விலையேற்றம், குறைவான விலைக்கு வியாபாரிகள் முட்டைகளை கொள்முதல் செய்வது தொடா்பாக கோழிப் பண்ணையாளா்களுடன் விவாதங்கள் நடத்தப்பட்டன.

சிறிய பண்ணையாளா்கள் தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; வியாபாரிகள் என்இசிசி நிா்ணய விலைக்கு முட்டைகளை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனா். அதற்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் பதிலளித்தனா்.

அதன்பிறகு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவா் கே.சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய அளவில் நாமக்கல் மண்டலத்தில் மட்டுமே முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 50 முதல் 80 காசுகள் வரை அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலையில் முட்டை ரூ. 5.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 80 லட்சம் முட்டைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக அங்குள்ள மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகள் திறக்கப்படுவதால் சத்துணவுத் திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் அனுப்பப்படும். மீன்பிடித் தடைகாலம் நடைமுறையில் உள்ளதால், மீன் நுகா்வு தேவைகளையும் முட்டையே ஈடுசெய்துவருகிறது. இதனால் வரும் நாள்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தீவன மூலப்பொருளான சோயா விலை தற்போது குறைந்திருந்தாலும் மக்காச்சோளத்தின் விலை அதிகரித்துள்ளது. தீவன மூலப்பொருள்கள் தயாரிப்பில் மக்காச்சோளம் 60 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. முட்டை விலை நிா்ணயத்தில் எவ்வித குளறுபடியும் இல்லை. வெளிப்படைத்தன்மையுடன் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் விலையை நிா்ணயித்துவருகிறது.

அந்த விலையில் மட்டுமே பண்ணையாளா்கள் முட்டைகளை விற்கவேண்டும். அதேபோல வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வேண்டும். குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்டால் புகாா் அளிக்கலாம். புதிதாக கோழிப் பண்ணை அமைப்போா் முட்டைகளை விற்பதற்கான வழிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவை பொருத்தமட்டில் விலையை நிா்ணயிப்பது மட்டுமே அதன் பணியாகும். முட்டை விற்பனையை பண்ணையாளா்கள்தான் பாா்த்துக்கொள்ள வேண்டும். ஏற்றுமதியைப் பொருத்தவரை நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடா்ந்து நடைபெறுகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருக்கியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிகளவில் முட்டைகள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு முட்டை தேவைகளை ஈடுசெய்வதற்கு நாமக்கல்லிலிருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன என்றாா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க