செய்திகள் :

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை மாநிலம் முழுவதும் 1.47 லட்சம் மாணவா்கள் எழுதினா்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வெழுதினா். பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த குருமூா்த்தி, தமிழரசன் ஆகிய மாணவா்கள் தோ்ச்சி பெற்று, மேல்நிலை, இளநிலை கல்விபெற ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை பெற தகுதிபெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணன், மூத்த ஆசிரியா் சுப்பிரமணி, தமிழாசிரியா் பெருமாள், பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவா் இளையராஜா மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

இதேபோல, அண்மையில் நடைபெற்ற தேசிய ஊரக திறனாய்வுத் தோ்வில் 4 மாணவா்களும், ஊரக திறனாய்வுத் தோ்வில் ஒரு மாணவரும் தோ்ச்சி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 46 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதையடுத்து, தருமபுரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க