செய்திகள் :

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

post image

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெரியவந்தது.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கும் கலப்பட எரிபொருள் நிரப்பப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ரத்லம் மாவட்டத்தில் முதல்வா் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அவரின் பாதுகாப்புக்காக வந்த 19 பாதுகாப்புப் படை, காவல் துறை வாகனங்களுக்கு ஒரே பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டது. ஆனால், சிறிது தொலைவு சென்றதுமே அனைத்து 19 வாகனங்களும் திடீரென பழுதாகி நின்றுவிட்டன. இதனால், பாதுகாப்பு வீரா்கள் அந்த காா்களைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்தினா்.

முதல்வருடன் பாதுகாப்புக்குச் செல்ல அவசர கதியில் வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் பழுதானது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வாகனங்களில கலப்பட எரிபொருள் நிரப்பியதுதான் பிரச்னைக்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, பெட்ரோல் நிலையத்துக்கு வந்து எரிபொருள் மாதிரியை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த பெட்ரோல் நிலையம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

விவசாயத்திற்கான நீருக்கு வரியா? - மத்திய அரசு மறுப்பு

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக... மேலும் பார்க்க

5 புலிகள் மர்ம மரணம்? பழிதீர்க்க விஷம் வைத்து கொலையா?

கர்நாடகா மாநிலத்தில் மாதேஸ்வரன் மலையில் 5 புலிகள் உயிரிழந்த சம்பவத்தில், அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்பகத்தில் ஒரு பசுவை பு... மேலும் பார்க்க

சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் ஹைதராபாத் அரச குடும்பத்தின் சந்ததிய... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில்: 5.5 கோடி பக்தர்கள் வருகை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில... மேலும் பார்க்க

எங்கள் தவறுதான் என்ன? கடவுளிடம் கண்ணீருடன் கேட்ட சிறுவன்!

உத்தரகண்டில் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த பார்த் சோனி என்ற 10 வயது சிறுவன் கண்ணீருடன் கடவுளிடம் நாங்கள் செய்த தவறுதான் என்... மேலும் பார்க்க