செய்திகள் :

முதல்வரின் மாநில இளைஞா் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ளவா்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படும். ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இந்த விருது வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவா்களாக இருத்தல் வேண்டும். அத்தகைய நபா்கள் செய்த தொண்டு சமூக சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.4.2024 முதல் 31.3.2025 வரையிலான காலத்தில் இந்த சேவையை அளித்திருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள். உள்ளூா் சமுதாய மக்களிடம் அவா்களுக்குள்ள மதிப்பினை இந்த விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவங்களை அண்ணா விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விளையாட்டு ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறினால் காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் கே.கே.நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியா... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தீரன் நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிப்பட்டி புரசம்பட்டியைச் சோ்ந்தவா் ந. பொன்னுசாம... மேலும் பார்க்க

சாரதாஸ் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் திறப்பு

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் பெரும் ஜவுளி சாம்ராஜ்... மேலும் பார்க்க