செய்திகள் :

முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?

post image

மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற்கொள்வது வழக்கம். தற்போது மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்று மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவிற்கு தேவேந்திர பட்னாவிஸ் குடியேறவில்லை. அதோடு முன்னாள் முதல்வரும், தற்போது துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து வர்ஷா இல்லத்தில் வசித்து வருகிறார். அவர் இன்னும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யாமல் காலம் கடத்தி வருகிறார். இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது.

சிவசேனா(உத்தவ்) முதல்வர் இல்லத்தில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ''முதல்வரின் வர்ஷா இல்லத்தில் பில்லிசூனியம் வைக்கப்பட்டுள்ளது.

பட்னாவிஸ்

துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி கையைவிட்டு போகக்கூடாது என்பதற்காக முதல்வரின் வர்ஷா இல்லத்தில் எருமை மாட்டை பலியிட்டு அதனை வர்ஷா இல்லத்தில் புதைத்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயிலுக்கு சென்றபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால்தான் தற்போது முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு இல்லத்திற்கு போகாமல் இருந்து வருகிறார்''என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியதை தொடர்ந்து இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் அரசு இல்லத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில்,''வர்ஷா இல்லத்தை ஏக்நாத் ஷிண்டே காலி செய்தவுடன் நான் அந்த வீட்டிற்கு செல்வேன். அந்த வீட்டில் சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதோடு எனது மகள் இப்போது 10வது வகுப்பு படித்து வருகிறார். அவரது தேர்வு முடிந்த பிறகு அரசு இல்லத்திற்கு செல்லாம் என்று இருக்கிறேன். அதனால்தான் அரசு இல்லத்திற்கு செல்லவில்லை. பில்லி சூனியம் வைக்கப்பட்டதால்தான் நான் அங்கு செல்லவில்லை என்று சொல்லப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. என்னைப்போன்ற பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்ற வதந்திகளுக்கு பதிலளிக்க தகுதியற்றது'' என்றார்.

இது குறித்து துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''பில்லி சூனியத்தில் அனுபவம் உள்ள ஒருவரால்தான் இது போன்று கூற முடியும்''என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பில்லி சூனியத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க

Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக... மேலும் பார்க்க

Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபய... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பீர் விற்பனை - சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?!

ரஷ்ய மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இடம்பெற செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று பத... மேலும் பார்க்க

Gujarat: தாய் இல்லாத தன் 6 குழந்தைகளைக் கூண்டில் வைத்துப் பாதுகாக்கும் தந்தை; என்ன காரணம் தெரியுமா?

தனது குழந்தைகளைச் சிங்கம் மற்றும் சிறுத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தனித்துவமான முயற்சியைக் கையாண்டுள்ளார் ஒருவர். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாய் இல்லாத தன் குழந்தை... மேலும் பார்க்க

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க