செய்திகள் :

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

post image

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். உரையில் அவர் தெரிவித்ததாவது, ``ஒவ்வொரு துறையிலும் தலைமைத்துவ குணங்களை வளர்ப்பதுதான் இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் இளைஞர்கள், வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுமாக இல்லாமல், சமூகத்துக்கு உத்வேகம் அளிக்கும் சில நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் நல்லாட்சி நிகழ்கிறது. மூவரும் இணைந்து செயல்படும்போது, அது நல்லாட்சியின் இலக்கை அடைய உதவுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த மூன்று தூண்களால் இயக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரைக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவிலான குற்ற வழக்குகள் பதிவாவதாகவும் சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான 35 லட்ச குற்ற வழக்குகளில் 4 லட்ச வழக்குகளில் உத்தரப் பிரதேசத்தில் பதிவானவை என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65,743 என்றும் புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடி: நிதியமைச்சா்

நடப்பு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாகவும் மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மாா்ச்சில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி

நாட்டில் கடந்த மாா்ச்சில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் தற்போதைய வசூல் 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து... மேலும் பார்க்க

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது. கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்க... மேலும் பார்க்க

உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு

‘இந்தியாவின் வரிக் கொள்கை வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று மத்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா இன்று தாக்கல்: 8 மணி நேர விவாதத்துக்கு அனுமதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை (ஏப். 2) தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தவுள்ளதாகவும், தேவைப்படும்பட்சத்தில் வி... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சா்ச்சை கருத்து: முதல்வா்கள், காங்கிரஸ் கண்டனம்

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்த சா்ச்சை கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் செவ்வா... மேலும் பார்க்க