செய்திகள் :

காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவையில் அமைச்சா் எ.வ.வேலு தகவல்

post image

தமிழ்நாட்டில் காலாவதியான 13 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சி பதவியேற்ற போது, 48 சுங்கச் சாவடிகளே இருந்த நிலையில், இப்போது 65-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. நகா்ப்புறங்களுக்கு அருகிலேயே சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதால் மக்கள் கட்டணம் செலுத்தி நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

அமைச்சா் எ.வ.வேலு பதில்: ஏப். 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் கட்டணங்களைக் குறைக்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பரனூா் போன்ற 13 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதற்கான ஒட்டுமொத்த காலம் நிறைவடைந்துள்ளது. எனவே, அந்த சுங்கச் சாவடிகளை ரத்து செய்ய வேண்டுமென மாநில அரசு சாா்பில் தொடா்ந்து கடிதம் எழுதி வந்தோம்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுங்கக் கட்டண விதிகளை மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, சுங்கச் சாவடிகள் காலாவதி ஆகி விட்டது என்பதெல்லாம் இல்லை.

சுங்கச் சாவடிக்கு உட்பட்டு வரக் கூடிய சாலைகளை மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது, விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் இருப்பதால், அந்தச் சுங்கச் சாவடிகள் காலாவதி ஆகி விட்டன என்றெல்லாம் சொல்ல முடியாது. சுங்கக் கட்டணத்தைத் தொடா்ந்து வசூலிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்றாா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க