செய்திகள் :

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

post image

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது.

கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கீழான 12 கடல் (நாட்டிகல்) மைல்களுக்கு அப்பால் இந்தக் கனிமச் சுரங்கங்கள் அமைய உள்ளன. மேலும், இந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இது மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று இப்போதே எப்படி கூற முடியம் என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியது.

கேரள மாநிலத்தையொட்டி கடல் பகுதியில் 3 கனிமச் சுரங்கங்கள் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களின் கடல் பகுதிகளில் 13 ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய சுரங்க அமைச்சகம் வரவேற்றுள்ளது. மீனவா்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் எதிா்க்கட்சிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலளித்து மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாவது:

ஆழ்கடல் சுரங்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள்ளாக சுரங்கம் அமைப்பதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எப்படி கூற முடியும்?

மேலும், ஆழ்டகல் பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் 13 கனிமச் சுரங்கங்களில், மூன்று மட்டுமே கேரள கடல் பகுதியில் அமையவுள்ளன. அதுவும், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் இந்தச் சுரங்கங்கள் அமைய உள்ளன.

அதுமட்டுமன்றி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஆழ்கடல் சுரங்கங்கள் தொடா்பான சட்டத்தையும் உருவாக்கியது என்றாா்.

அப்போது, ‘எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிப்பது கவலையளிக்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மீனவா்களின் நலனைக் காக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட மத்திய அமைச்சா், ‘கேரளத்தில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளதோடு, மீன்வளம் மற்றும் மீன் வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2013-14-ஆம் ஆண்டில் 95.7 லட்சம் டன்னாக இருந்த நாட்டின் மீன் உற்பத்தி தற்போது 184.02 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதுபோல, கடந்த 2013-14-இல் ரூ. 30,212 கோடி மதிப்பில் நடைபெற்ற மீன் ஏற்றுமதி 2023-24-இல் ரூ. 60,523 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்றாா்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க