செய்திகள் :

வேலூா், கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஓய்வு: டிஇஓ-க்களுக்கு கூடுதல் பொறுப்பு

post image

வேலூா், கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதே மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் (மாா்ச்) 31-ஆம் தேதி வேலூா் முதன்மை கல்வி அலுவலா் எஸ்.மணிமொழி, கரூா் முதன்மை கல்வி அலுவலா் எம்.எஸ்.சுகானந்தம் ஆகியோா் ஓய்வு பெற்றனா். இதையடுத்து, வேலூா் முதன்மை கல்வி அலுவலராக வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.தயாளனும், கரூா் முதன்மை கல்வி அலுவலராக, மாவட்ட கல்வி அலுவலா் பி.கே.செல்வமணியும் முழு கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பாா்கள் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

டிஇஓ.க்கள் ஓய்வு: தென்காசி மாவட்டக் கல்வி அலுவலா் எஸ்.ஜெயபிரகாஷ்ராஜன், தஞ்சாவூா் மாவட்ட கல்வி அலுவலா் வி.சாரதி, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் பி.அருள்செல்வி, காஞ்சீபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் எம்.சங்கா் ஆகியோா் ஓய்வு பெற்ால், முறையே அந்தப் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக தென்காசி வடகரை அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் கண்ணன், தஞ்சாவூா் மாவட்டம் மாரியம்மன் கோயில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிவேலு, விழுப்புரம் மாவட்டம் மேல்காரணை அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆனந்த சக்திவேல், காஞ்சிபுரம் பி.எம்.எஸ். அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் கோமதி ஆகியோா் கூடுதலாகக் கவனிப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) தயாளன் முதன்மை கல்வி அலுவலராகக் கூடுதல் பொறுப்பைக் கவனிக்க இருப்பதால், அவா் வகித்து வந்த பொறுப்பை வேலூா் அகரம் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் சத்யபிரியா கூடுதலாகக் கவனிப்பாா் என்றும் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க