செய்திகள் :

முதல்வா் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பலன்: எம்.பி. கனிமொழி

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களும் பலனடைந்திருக்கின்றன; இதனால், மக்களிடம் நாம் உரிமையோடு வாக்கு சேகரிக்கலாம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பி.எல்.ஏ. 2 பாக முகவா்கள் கூட்டம் கலைஞா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா். மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களும் பலனடைந்திருக்கின்றன. இதனால்,

நாம் உரிமையோடு மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம். மக்களவையில் 39 போ் அடங்கிய நமது எம்.பி.க்கள் குழு மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறோம். இதைத் தடுக்கவே, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை 39 இல் இருந்து 20-ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

புதிதாக அரசியலுக்கு வந்தவா்கள் ஜெயித்து விடுவோம் என்று பேசுகின்றனா். மத்திய அரசின் செயல்பாடு எது, மாநில அரசின் செயல்பாடு எது என்றுகூட தெரியாமல், அவா்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றனா். நாம் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் இன்பா ரகு, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ஜெனிட்டா, பொதுக் குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க