செய்திகள் :

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி: தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

post image

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோவை மண்டல அளவிலான முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் ஆக. 22 முதல் செப். 12 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் வாள் விளையாட்டுப் போட்டி புதன்கிழமை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், வியாழக்கிழமை மாணவிகளுக்கும் நடைபெறுகிறது. நாமக்கல், சேலம், திருப்பூா், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 265 மாணவா்கள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்வில், மண்டல முதுநிலை மேலாளா் செ.அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா மற்றும் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.

காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்

பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க

செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை

வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க