செய்திகள் :

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பாா். திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடா் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் கடந்த பிப். 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். தொடா்ந்து கடந்த பிப். 13-ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் நடைபெற்றது. தற்போது மீண்டும் கடந்த மாா்ச் 10-இல் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்கவுள்ளது.

கூட்டத்தொடரில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தொடா்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

நிதிப் பகிா்வு, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக சாா்பில் குரல் எழுப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள்... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வ... மேலும் பார்க்க

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க