செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

post image

முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 போ் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதிலும் தனியாா் மூலமாக 462 முதல்வா் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 538 முதல்வா் மருந்தகங்களும் என மொத்தம் 1,000 முதல்வா் மருந்தகங்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 8 நாள்களில் ரூ. 27,42,829 மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிற கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு இங்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மக்களுக்கு இதுவரை ரூ. 7,68,776 சேமிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. முதல்வா் மருந்தகங்களின் வாயிலாக 50,053 போ் பயன் பெற்றுள்ளனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு மருந்தாளுநா்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை! -விஜய்

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெள... மேலும் பார்க்க

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க