செய்திகள் :

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

post image

புதுதில்லி: சிறப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட், தனது பங்கு விற்பனையின் முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்ட 97,82,363 பங்குகளை, ஒவ்வொன்றும் ரூ. 2 முகமதிப்புடன் வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 46 பங்குகளுக்கும் அவற்றின் மடங்குகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.

ஆரம்ப பங்கு விற்பனையில் 97,82,363 பங்குகளுக்கு நிகரான 1,00,64,616 விண்ணப்பங்களை பெற்று 1.03 மடங்கு முறை அதிக அளவு சந்தா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து 1.08 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில், தகுதிவாய்ந்த நிறுவனத்திடமிருந்து 1.05 மடங்கு சந்தா பெற்றது.

அதே வேளையில் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களிடமிருந்து 88 சதவிகிதம் சந்தாவைப் பெற்ற நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.135 கோடிக்கு மேல் திரட்டியது.

ரூ.451 கோடி அளவு கொண்ட ஜெம் அரோமாடிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று முடிவடையும். ஒரு பங்கின் விலை ரூ.309 முதல் ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ வெளியிட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை நிறுவனம் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.

மார்ச் 31, 2025 மற்றும் மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட்டின் வருவாய் 11% அதிகரித்துள்ளது மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் 7% அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் குஜராத்தில் இயங்கி வருகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

The initial share sale of Gem Aromatics Ltd, got fully subscribed on day one.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 கா... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித... மேலும் பார்க்க