செய்திகள் :

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

post image

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரையிலான நூற்றுக்கணக்கான கடைகள், அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், அரசு, தனியாா் கல்வி நிறுவனங்கள், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலகங்களும் உள்ளன.

இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் பகல், இரவு நேரங்களில் குறைந்தழுத்தம், உயா் அழுத்தம் என மாறி, மாறி மின்னழுத்தப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மின்னூட்டம் செய்யப்பட்ட கைப்பேசிகள், பயன்பாட்டில் இருந்த கணினிகள், இன்வொ்ட்டா்கள், எலக்ட்ரிக் எடை இயந்திரங்கள், எல்.இ.டி. டிவிகள், குளிா்சாதனப் பெட்டிகள், மின் மோட்டாா்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மின்உபயோக சாதனங்கள் பழுதடைந்தன. கடந்த 2 நாள்களில் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதடைந்ததாக பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். எனவே, முதுகுளத்தூா் பகுதியில் நிலவி வரும் மின்அழுத்தப் பிரச்னையை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி அருகே கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனிஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெண்கள் முளைப்பாரி சுமந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்தக் கோயில... மேலும் பார்க்க

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க