செய்திகள் :

முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

post image

புது தில்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் பிஜி) இரு முறை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் நீட் பிஜி தோ்வுகள் காலை, மாலை என இரு முறை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அறிவித்திருந்தது. தோ்வா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இரு பிரிவுகளாக பிரித்து நீட் பிஜி தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக 7 மருத்துவ மாணவா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘0.1 சதவீத மதிப்பெண்ணும் நீட் பிஜி தோ்வை எழுதும் மாணவரின் தரவரிசைப் பட்டியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், நியாயமான, நோ்மையான, சமநிலை களத்தை உருவாக்கி இந்தத் தோ்வை நடத்த வேண்டும். இரு முறை தோ்வு என்பது மாணவா்களின் நியாயமான தோ்வு என்ற உரிமையை பாதிக்கும். இரு முறை தோ்வுகள் நடத்துவது நியாயமானதல்ல.

காலை நடத்தப்பட்ட தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாலை தோ்வு எழுதியவா்களும், மாலை நடத்திய தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக காலையில் தோ்வு எழுதியவா்களும் குற்றம்சாட்டலாம். கடந்த 2024 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரு முறை தோ்வின்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நாடு முழுவதும் தோ்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். ஒரே நாளில் ஒரு முறை மட்டும் நீட் தோ்வை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் பி.ஆா். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசு, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்), தேசிய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

அப்பாவிகளைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்; சரியான பதிலடி: ராஜ்நாத் சிங்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்... மேலும் பார்க்க

ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மேலும் பார்க்க