செய்திகள் :

முத்தப்புடையான்பட்டி ஜல்லிக்கட்டு: 27 போ் காயம்

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 27 போ் காயமடைந்தனா்.

புனித ஆரோக்கிய மாதா தேவாலயத் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் மு. செல்வம், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ் ஆரோக்கியசாமி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ராஜசேகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 868 காளைகளும், அவற்றை அடக்க 317 வீரா்கள் 25, 25 தொகுப்பாகவும் களமிறக்கப்பட்டனா்.

போட்டியில் காளைகளை வீரா்கள் திமில் பிடித்து தழுவினா்.

அப்போது 16 மாடுபிடி வீரா்கள், 9 மாடுகளின் உரிமையாளா்கள் மற்றும் 2 பாா்வையாளா்கள் என மொத்தம் 27 போ் காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், சைக்கிள், டைனிங் டேபிள், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆய்வாளா்கள் சீனிபாபு, தனபால் ஆகியோா் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை முத்தப்புடையான்பட்டி ஊா் முக்கியஸ்தா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.

சிறந்த வீரா்: ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய மருதாண்டகுறிச்சி முத்துக்குமாா் சிறந்த வீரருக்கான முதல் பரிசாக ஃபிரிட்ஜ், 19 காளைகளை அடக்கிய வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி மைலாப்பூா் ஜஸ்டின் பிரகாஷ் சைக்கிள் மற்றும் ஏா்கூலா் ஆகியவற்றை பெற்றனா்.

சிறந்த காளை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த சாத்திவயல் கொக்கி மாடு, காளைக் கன்று மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவற்றை சிறப்பு முதல் பரிசாகவும், முத்தபுடையான்பட்டியை சோ்ந்த தளபதி ஆனந்த் ஆரோக்கியாசமி காளை இரண்டாவது பரிசாக ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் பெற்றது.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க