செய்திகள் :

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

post image

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.

இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 4 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாமிடம் பிடித்தது. ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

இந்தத் தொடர் முழுவதும் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளது.

பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 201 ரன்கள் குவித்து இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் மற்ற இந்திய வீராங்கனைகளான பிரதீகா ராவல் (164 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (148 ரன்கள்), தீப்தி சர்மா (126 ரன்கள்) எடுத்துள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம், சதம் எடுக்காவிட்டாலும், அவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

பந்துவீச்சைப் பொருத்தவரையில் ஸ்நே ராணா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த தொடரில் இலங்கை அணியும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. லீக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஹர்சிதா சமரவிக்கிரம 53 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இரண்டு அரைசதங்களுடன் 177 ரன்கள் குவித்துள்ள சமரவிக்கிரம, இலங்கை அணி வீராங்கனைகளில் அதிக ரன்கள் குவித்தவராக உள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து 4 போட்டிகளில் 88 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் அவருடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படாத நிலையில், இறுதிப்போட்டியில் நன்றாக விளையாட வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

சமபலத்துடன் உள்ள இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்

சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது எளிதான விஷயமாக இருக்காது என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்ட... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அணியில் இடம்பெறவில்லை.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொ... மேலும் பார்க்க