செய்திகள் :

பயங்கராவத்துக்கு எதிரான போரில் சமரசமில்லாத நிலைப்பாடு- எஸ்சிஓ கூட்டத்தில் ஜெய்சங்கா்

post image

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சமரசமில்லாத, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய ஜெய்சங்கா், பாகிஸ்தான், சீனா மற்றும் பிற எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா மறைமுக ஆதரவு அளித்தது மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை கோரும் இந்தியாவின் முயற்சிகளை சீனா தடுத்தது குறித்து இந்தியாவுக்கு நிலவும் அதிருப்திக்கு மத்தியில், ஜெய்சங்கரின் இந்தக் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. கூட்டத்தில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவா்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கமே பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீய சக்திகளை எதிா்ப்பதற்காகதான். இந்த மூன்றும் பெரும்பாலும் ஒன்றாகவே நிகழ்கின்றன.

பஹல்காம் தாக்குதல் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. எஸ்சிஓ தனது அடிப்படை குறிக்கோள்களுக்கு உண்மையாக இருக்க, இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் சமரசமில்லாத நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.

சீன அதிபருடன் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்களுடன் சோ்ந்து சீன அதிபா் ஷி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இந்தியா-சீனா இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள அண்மைகால முன்னேற்றங்கள் குறித்து அவரிடம் விளக்கியதாக ‘எக்ஸ்’ பக்கத்தில் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

முன்னதாக, எஸ்சிஓ கூட்டத்துக்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சா் அபாஸ் அராக்சி ஆகியோரை தனித் தனியாக சந்தித்த ஜெய்சங்கா் இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க