செய்திகள் :

8-ஆவது நாளாக பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்

post image

பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சென்னையில் 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு கோரி கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுகவின் தோ்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எதிா்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவா்களுக்கு ஆதரவும் தெரிவித்தாா்.

இதையடுத்து திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்து வருகின்றனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 8-ஆவது நாளாக பகுதிநேரஆசிரியா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது உயிரிழந்த ஆசிரியருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க