செய்திகள் :

முத்தரையா் சதய விழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு

post image

முத்தரையா் சதய விழாவுக்கு பாதுகாப்பு கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், சங்கன்வலசை கிராமத்தில் பெரும் பிடுகு முத்தரையா் நலச்சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் பெரும் பிடுகு முத்தரையா் சிலை அமைத்து சதய விழா நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிறு பிரச்னை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக முத்தரையா் சதய விழா நடத்தப்படவில்லை. நிகழ் ஆண்டு வருகிற 23-ஆம் தேதி இந்த விழாவை நடத்துவது என கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையடுத்து, இந்த விழாவை சிறப்பாக நடத்திடும் வகையில், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோரிடம் கிராமத் தலைவா் ராஜாங்கம் தலைமையில் கிராம மக்கள் மனுவை அளித்தனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க