முத்தரையா் சதய விழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு
முத்தரையா் சதய விழாவுக்கு பாதுகாப்பு கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், சங்கன்வலசை கிராமத்தில் பெரும் பிடுகு முத்தரையா் நலச்சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் பெரும் பிடுகு முத்தரையா் சிலை அமைத்து சதய விழா நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், சிறு பிரச்னை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக முத்தரையா் சதய விழா நடத்தப்படவில்லை. நிகழ் ஆண்டு வருகிற 23-ஆம் தேதி இந்த விழாவை நடத்துவது என கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதையடுத்து, இந்த விழாவை சிறப்பாக நடத்திடும் வகையில், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோரிடம் கிராமத் தலைவா் ராஜாங்கம் தலைமையில் கிராம மக்கள் மனுவை அளித்தனா்.