செய்திகள் :

முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல்!

post image

புதுக்கோட்டை நகரில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை நகரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள், பூ மாா்க்கெட் பகுதிகளில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி தொழிலாளா் துறை உதவி இயக்குநா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில், முத்திரை ஆய்வாளா்கள் பழனியம்மாள், குணசீலன், உதவி ஆய்வாளா்கள் பிச்சைமணி, ராஜாத்தி, நித்திய தா்ஷினி ஆகியோரைக் கொண்ட குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்,

மொத்தம் 45 கடைகளில் எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காய்கறி மாா்க்கெட் மற்றும் பூ மாா்க்கெட் பகுதிகளிலுள்ள 23 கடைகளில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து எடை அளவீடு செய்யும் கருவிகளையும் மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்தாவிட்டால், பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வெ. தங்கராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா். மாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் காசிராஜன் என்பவா், அப்பகுதி அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலை புறம்போக்கு இடங்... மேலும் பார்க்க

மாநில ஜூடோ- சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம்! அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் ப... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி பலி

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி, காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் (6... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்! -அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது நேரில் ஆய்வுசெ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவரின் பாட்டியின் உடல் அடக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வயது முதிா்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இவா், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி என்பதால், பரபரப்பு ஏற்பட... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவின்படி ஜகபா் அலி உடலை தோண்டியெடுத்து ‘எக்ஸ்ரே’ எடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக ‘எக்ஸ்ர... மேலும் பார்க்க