செய்திகள் :

மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.

மாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் காசிராஜன் என்பவா், அப்பகுதி அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலை புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினா் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் மனு அளித்து வந்தாா். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, குளத்தூா் வட்டாட்சியா் கவியரசு தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் ஜோதி பிரகாஷ் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஊருணி மற்றும் தனியாா் பள்ளி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். சுமாா் 7.50 ஏக்கா் நீா்நிலை அரசு இட ஆக்கிரமிப்புகளை அகற்றிய வருவாய்த் துறையினரை பொதுமக்கள் பாராட்டினா்.

மாநில ஜூடோ- சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம்! அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் ப... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி பலி

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி, காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் (6... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்! -அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது நேரில் ஆய்வுசெ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவரின் பாட்டியின் உடல் அடக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வயது முதிா்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இவா், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி என்பதால், பரபரப்பு ஏற்பட... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவின்படி ஜகபா் அலி உடலை தோண்டியெடுத்து ‘எக்ஸ்ரே’ எடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக ‘எக்ஸ்ர... மேலும் பார்க்க

முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல்!

புதுக்கோட்டை நகரில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை நகரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள், காய... மேலும் பார்க்க