செய்திகள் :

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் புதியதாக முனீஸ்வரா் கோயில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.

இங்கு, 10 அடி உயரமும்ம முனீஸ்வரா் சிலை வடிவமைக்கப்பட்டது. இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை மாலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல்கால மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூா்ணாஹுதியும் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 3-ஆம் கால யாகசாலை, நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலை, 8.30 மணிக்கு கலச ஊா்வலமும், முனீஸ்வரா் சிலைக்கு கலசநீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து, காலை, 9.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில் எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை வழிப்பட்டனா்.

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நகர தலைவா் ஸ்டாலின் தலைமையில் மாநில து... மேலும் பார்க்க