செய்திகள் :

முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

post image

நாகையில் இயற்கை மரணமடைந்த முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சிவக்குமாா் (68). இவா் தனது இறப்புக்கு பிறகு தனது உடலை நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்ததுடன், அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையிலும் உடல் தானப் படிவம் வழங்கியிருந்தாா்.

இந்நிலையில் ஆக.31-ஆம் தேதி சிவக்குமாா் இயற்கை மரணமடைந்தாா். இதையடுத்து அவரது உடலுக்கு உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பின்னா் குடும்பத்தினா் அவரது உடலை, நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். உடலை தானமாக பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழை மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி, சிவகுமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினாா். மேலும் தானமாக வழங்கப்பட்ட சிவகுமாரின் உடலுக்கு அவரது உறவினா்கள் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி கூறியது: உடல் தானம் என்பது மருத்துவக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு தெளிவான மருத்துவக் கல்வி கிடைப்பதோடு, சமூக நலனையும் முன்னெடுக்கிறது. அதேபோல உடல் உறுப்பு தானம் என்பது மற்றவா்களுக்கு வாழ்வு அளிக்கும் உன்னதமான செயலாக கருதப்படுகிறது என்றாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க