செய்திகள் :

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

post image

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.

காலை 9.27 மணியளவில் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்று நின்றுள்ளது. உடனடியாக அவசரகால நடவடிக்கையை மேற்கொண்ட விமான நிலைய பாதுகாப்புக் குழு, விமானத்தை பத்திரமாக டாக்ஸி பகுதிக்கு கொண்டுவந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியது.

இதன்காரணமாக விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாகவும், ஒரு என்ஜின் ஓடுபாதையில் மோதி சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தை உறுதிபடுத்தும் விதமாக ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை காரணமாக விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதாகவும், பின்னர் விமான ஊழியர்களும், பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“கொச்சியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையைக் கடந்து சென்றது. இதையடுத்து விமான நிலையத்தின் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக பயணிகளை மீட்கும் பணியைத் தொடங்கியது. அனைத்து பயணிகள், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையான 9/27 சிறிதளவு சேதமடைந்துள்ளது. உடனடியாக, இரண்டாவது ஓடுபாதையான 14/32 செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இதனால், விமான நிலையத்தில் சேவை சிறிதளவு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

Three tires of an Air India flight that landed in Mumbai burst.

இதையும் படிக்க : ஒபாமா கையில் விலங்கு; சிறையில் அடைப்பு! உண்மையில்லை, டிரம்ப் பகிர்ந்த ஏஐ விடியோ!!

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர்இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.மக்கள... மேலும் பார்க்க

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த்... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக விவாதம் நடத்துவதுடன், அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன.... மேலும் பார்க்க