செய்திகள் :

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

post image

நமது சிறப்பு நிருபர்

காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதிலில், "மத்திய மீன்வளத் துறையால் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் அங்கமாக காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் 100 கடலோர மீனவ கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தமிழகத்தில் 16 கடலோர மீன்பிடி கிராமங்கள் மேம்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடற்பாசி வளர்ப்பு, செயற்கை கடலடிப்பவளப்பாறைகள் அமைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் மீன்வளத் துறையில் ஏற்படும் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் கடலோர மீன்பிடி கிராமங்களை ஊக்குவித்தல் போன்ற முன்முயற்சிகளை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா ஒருங்கிணைக்கிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

கேரளத்தை உலுக்கிய வன்கொடுமை, கொலைக் குற்றவாளி! சிறையிலிருந்து தப்பிய 1 மணி நேரத்தில் கைது!

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறைச் சாலையிலிருந்து தப்பிய நிலையில், ஒரு மணி நரேத்தில் பிடிபட்டார்.கன்னூர... மேலும் பார்க்க

4,078 நாள்கள் பிரதமராக..! நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை முறியடித்த மோடி!

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை ... மேலும் பார்க்க

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள்... மேலும் பார்க்க

கர்ப்பிணி மனைவியைக் கொன்று, அழுகிய உடலுடன் வாழ்ந்துவந்த இளைஞர்!

பெங்களூர்: பெங்களூரில் 22 வயது கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, அழுகிய உடலுடன் அதே வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு, குடித்துக்கொண்டு இயல்பாக வாழ்ந்துவந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.பெங... மேலும் பார்க்க

மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு 2 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாலத்தீவு அதிபர் ம... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி! 40 குழந்தைகளின் கதி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்கு... மேலும் பார்க்க