செய்திகள் :

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

post image

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாட உள்ளதாகக் கூறி கடந்த மாதம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தனது குடும்பத்துடன் கோவாவுக்கு நகரவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

கோவா அணிக்காக விளையாடவுள்ளதாகக் கூறிய ஜெய்ஸ்வாலின் விருப்பத்தினை மும்பை கிரிக்கெட் சங்கமும் உடனடியாக ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், கோவாவுக்கு நகர்வதில் குடும்பத்தின் திட்டங்கள் சிலவற்றை யோசிக்க வேண்டியிருப்பதால், அடுத்த சீசனின் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஜெய்ஸ்வால் கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: கோவா அணிக்காக விளையாட எனக்கு கொடுக்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். கோவாவுக்கு நகர்வதற்கு சில குடும்ப திட்டங்கள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால், இந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாட அனுமதி அளிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கோவா அணிக்காக விளையாடுவதற்காக பெற்ற தடையில்லாச் சான்றிதழை நான் பிசிசிஐ இடமும் ஒப்படைக்கவில்லை. கோவா கிரிக்கெட் சங்கத்திடமும் ஒப்படைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை த... மேலும் பார்க்க

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என... மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க