செய்திகள் :

மும்பை: காதலன் துணையோடு கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்து டைல்ஸ் பதித்த பெண்; சிக்கியது எப்படி?

post image

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாரா பகுதியில் வசிப்பவர் விஜய் செளகான். இவரது மனைவி சமன் தேவி (28). கடந்த சில நாட்களாக விஜய் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதே பகுதியில் வசிக்கும் விஜய் சகோதரர்கள் வந்து, விஜய் குறித்து அவரது மனைவியிடம் விசாரித்தனர்.

அவர் குர்லாவிற்கு வேலைக்குச் சென்று இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் விஜய் வீட்டிற்கு அவரது சகோதரர்கள் வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது.

வீட்டிற்கு அருகில் வசித்தவர்களிடம் விசாரித்தபோது இரண்டு நாட்களுக்கு முன்புதான் சமன் தேவி கிளம்பிச்சென்றதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சமன் தேவிக்கு போன் செய்து பார்த்தபோது அவரது போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஜய் வீட்டை அவரது சகோதரர்கள் திறந்து பார்த்தனர். வீட்டிற்குள் எதுவும் இல்லை. ஆனால் வீட்டின் ஓரத்தில் ஒரு பகுதியில் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தபோது விஜய் ஆடைகள் முதலில் தென்பட்டது. மேற்கொண்டு தோண்டியபோது உள்ளே விஜய் உடல் இருந்தது. உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து வீட்டிற்குள் தோண்டி விஜய் உடலை எடுத்தனர். 4 அடி ஆழத்தில் வீட்டிற்குள் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. விஜய் வீட்டிற்கு அருகில் உள்ள வசித்து வந்த விஷ்வகர்மா(20) என்ற கல்லூரி மாணவரும் காணாமல் போய் இருந்தார். சமன் தேவியும், பக்கத்தில் வசிக்கும் 20 வயது வாலிபரும் சேர்ந்து விஜய்யைக் கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து இருப்பதாகத் தெரிகிறது.

அவர்கள் இரண்டு பேரும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர்களது போன்கள் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் ஆக இருக்கின்றன.

விஜய்யும் சமன் தேவியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமன் தேவி தனது கணவனைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பிச்செல்லும்போது தனது மகனையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சமன் தேவி தனது கணவரின் மொபைல் போனைப் பயன்படுத்தி விஜய் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்திருந்தார். அதோடு விஜய் ஏ.டி.எம்.கார்டைப் பயன்படுத்தியும் பணத்தை எடுத்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வடைந்து ரூ.6 லட்சம் கிடைத்து இருந்தது. அதோடு அவரது வங்கிக் கணக்கில் 3 லட்சம் ரூபாய் இருந்தது. எனவே தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு விஜய் புதிய வீடு வாங்கத் திட்டமிட்டு இருந்தார்.

விஜய்
விஜய்

அதோடு தற்போது அவர்கள் வசித்து வந்த வீட்டையும் தனது மனைவி பெயருக்கு விஜய் மாற்றிக்கொடுத்தார். ஆனால் கடந்த 15 நாட்களாக தனது சகோதரர்கள் மற்றும் அருகில் உள்ள உறவினர்களிடம் கூட விஜய் போனில் பேசவில்லை.

விஜய் சித்தப்பா மோகன் விஜய் வீட்டிற்கு நேரடியாகச் சென்றபோது அங்கிருந்த சமன் தேவியிடம் விஜய் போன் இருந்தது. விஜய் வேலைக்குச் சென்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சந்தேகம் அடைந்து மும்பை முழுவதும் உள்ள உறவினர்களிடம் விஜய் குறித்து விசாரித்தனர்.

எங்கேயும் விஜய் செல்லவில்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகே அவர்களின் சந்தேகம் மேலும் தீவிரம் அடைந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சமன் தேவி கூலித்தொழிலாளர் ஒருவரை அழைத்து வீட்டிற்குள் 3.9 அடி ஆழத்தில் குழி தோண்டச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு வேறு ஒரு தொழிலாளரை அழைத்து அந்த இடத்தில் புதிய டைல்ஸ் பதித்துள்ளார். இதற்காக ரூ.1200 கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

புதுச்சேரி: `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா ?’ - இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்

புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கி... மேலும் பார்க்க

``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: திணறும் காவல்துறை; ரூ.5 லட்சம் சன்மானம் - என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டி... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மருத்துவக்கல்லூரியில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள்- நடவடிக்கை எடுக்குமா விசாகா கமிட்டி?

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ... மேலும் பார்க்க