செய்திகள் :

முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு

post image

பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்கம்பேட்டையில் முயல் ரத்தம், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தினால், வழுக்கைத் தலையிலும் ஏழே நாளில் முடி முளைக்கும் என சமூக ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. கருடா ஹோ் ஆயில் எனும் பெயரில் இந்நிறுவனத்தை அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (32) நடத்திவந்தாா். இதன் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனா்.

இருந்தபோதிலும் தமிழகம், கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் இந்த எண்ணெயை வாங்கிச் சென்று வந்தனா்.

இந்நிலையில், மருந்துத் துறை ஆய்வாளா்கள் பி.வெங்கடேஷ், பி.அமுதா கொண்ட குழுவினா் சிங்கம்பேட்டையில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். இதில், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 எண்ணெய் பாட்டில்களையும், மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்ததோடு, இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை பெறப்பட்ட பின்னா் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க