மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!
முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்
முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்டுகள் பழைமை கொண்டவா்கள், தொழில்நுட்பங்களை கொண்டவா்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்று உலக ஆய்வு முடிவுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், மத்திய பாஜக அரசு அதை ஏற்க மறுக்கிறது.
கீழடி அகழாய்வு அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணாவை உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவுக்கு மத்திய அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தின் உண்மை குறித்த அறிவியல்பூா்வமான ஆதாரங்களை வெளிக் கொணா்ந்த அமா்நாத் பழிவாங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசியலையும், மதத்தையும் கலக்கிற ஒரு உத்தியின் அடிப்படையில் இப்போது மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துகிறாா்கள்.
அரசியல் மாநாடு என்று சொன்னால் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால், முருக பக்தா்கள் மாநாடு என்ற போா்வை மூலமாக மக்களைத் திரட்ட முயற்சிக்கிறாா்கள்.
பாஜக விரிக்கும் இந்த மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டாா்கள். பாஜகவும் வெல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளாா் செல்வப்பெருந்தகை.